ஹைகூ

நவம்பர் 3, 2009 prad2deep மறுமொழியவும்

பச்சை  கொடியா
காட்டி  சென்றாள்
பச்சை  சுடிதார்!

காற்று  வாங்கும்   புத்தககடை
இன்டர்நெட்  கபெயில்
இளைஞர்  கூட்டம்!

பெண்  பார்க்கும்  திருவிழா
நண்பர்கள்  கூறிக்கொள்வது
அபிசியல் சைட்!

கோவில்  திருவிழா
அம்மான்களை தரிசிக்க
இளைஞர்  கூட்டம்!

அரசு  நூலகம்
அமைதியை  குலைப்பது
ஊழியர்  பெண்!

விடுமுறை  நாள்
என்னை  பார்காடது  போல்  கடந்து சென்றாள்
வகுப்பு  தோழி!

வகுப்பறை
கைப்பிடித்து  பேசுகின்றனர்
ஒரு  ஆணும்  ஆணும்!

Categories: Uncategorized

தேடல்

நவம்பர் 3, 2009 prad2deep மறுமொழியவும்

குடும்பபாங்கான
பெண்  வேண்டும்  என்றார்கள்
தேடி  அலைந்தேன்
கோவிலிலே!!

Categories: Uncategorized

உனக்குத் தெரியுமா…???

அக்டோபர் 17, 2009 prad2deep 1 comment

உனக்குத் தெரியுமா…images

அவ உன் 
முறைப்பொன்னுடா என்று
நம் சிறுவயதில்
பாட்டி விளையாட்டாய் சொன்னபோதே
நீ என்னவள் என்று 
முடிவு செய்தேனே அது
உனக்குத் தெரியுமா?

உன் கைப்பிடித்து நடந்த 
அந்த சிறுவயது நாட்கள் 
என் மனதில் 
இன்றும் அரங்கேறுவது 
உனக்குத் தெரியுமா?

நீ வீட்டிற்கு வரும்
அந்த மே மாதத்திற்காக
நான் வருடம் முழுதும் 
காத்திருந்தது 
உனக்குத் தெரியுமா?

உன்னை சிரிக்க வைக்க
நான் படித்த நகைச்சுவைகளை எல்லாம்
மனப்பாடம் செய்தது 
உனக்குத் தெரியுமா?

உனக்காய் செலவு செய்ய
வருடம் முழுதும் காசு போட்ட
உண்டியலை உடைப்பேனே, அது
உனக்குத் தெரியுமா?

நீ உறங்க 
கதை கேட்பாய் 
அதற்காக நான் படித்த 
புத்தகங்கள் எத்தனை என்று
உனக்குத் தெரியுமா?

ஒரு நாள் அதிகாலை
விளையாட்டாய் என் முகத்தில் 
கண் மையால் நீ 
மீசை வரைந்த போது
அதை உணர்ந்தும்
கண் மூடி படுத்திருந்தேன்
உன் ஸ்பரிசம் பெற
அது உனக்குத் தெரியுமா?

மறுநாள் உன் முகத்தில்
நான் மீசை வரைந்த போது 
உன் மேனி குளுமையில்
சிலிர்த்துப் போனது 
உனக்குத் தெரியுமா?

என் அறையில் நீ உறங்கும்போது 
கண் இமைக்காமல் உன் முகத்தை
நான் பார்த்திருந்த நிமிடங்களை 
உனக்குத் தெரியுமா?

நீ என்னை எண்ணி 
வியக்க வேண்டுமென்றே
நான் வரைந்த ஓவியங்கள் 
எத்தனை என்று 
உனக்குத் தெரியுமா?

எங்கே நீ என்னை விட
உயரமாக வளர்ந்து விடுவாயோ 
என்று எண்ணி 
நான் குதித்த உயரங்களை 
உனக்குத் தெரியுமா?

என் நண்பர்கள் அனைவரும்
சக மாணவியர் பின்னால் அலைய
நாள் மட்டும் 
உன் நினைவில் அலைந்தது 
உனக்குத் தெரியுமா?

பல வருடங்களாக 
நீ அனுப்பிய 
வாழ்த்து அட்டைகளையும் கடிதங்களையும்
நான் பொக்கிஷமாக வைத்திருப்பது
உனக்குத் தெரியுமா?

உன் கடிதங்களின் இறுதியில்
‘Yours Lovingly’ என்று எழுதுவதை
எனக்கு சாதகமாகக் கருதி 
நான் மகிழ்ந்த தருணங்களை 
உனக்குத் தெரியுமா?

நீ சோர்ந்து போகும் தருணங்களில்
உனக்கு நான் கூறும் அறிவுரைகளை
எண்ணி நானே வியந்து போனது 
உனக்குத் தெரியுமா?

பன்னிரண்டாம் வகுப்பில்
முதல் வகுப்பில் தேர்வு பெற்றும்
மகிழாத நான்
பத்தாம் வகுப்பில் நீ
இரண்டாம் வகுப்பில் 
தேரியபோது கொண்டாடியது 
உனக்குத் தெரியுமா?

உன் தந்தை வழி 
முறைப்பையனிடம் 
நீ சிரித்துப் பேசியபோதெல்லாம்
பொறாமையில் நான் நொந்து போனது 
உனக்குத் தெரியுமா?

ஒவ்வொரு காதலர் தினத்தின் போதும்
உனக்காய் நான் வாழ்த்து அட்டை 
வாங்கி வைத்தது 
உனக்குத் தெரியுமா?

ஒரு முறை 
நீ விட்டுச்சென்ற துப்பட்டாவை
யாரும் பார்க்காமல்
நான் முத்தமிட்டு அணைத்துக்கொண்டது
எத்தனை முறை என்று
உனக்குத் தெரியுமா

உன்னை நாயகி ஆக்கி
நான் எழுதிய 
காதல் கவிதை
எத்தனை என்று
உனக்குத் தெரியுமா

நானாகச் சொல்ல வேண்டாம்
நீயாகச் சொல்ல வேண்டும் என்று 
நான் காத்திருந்த வருடங்கள்
எத்தனை என்று 
உனக்குத் தெரியுமா

உன் காதல் கைகூட
நீ என்னை அணுகியபோது
நான் அனுபவித்த வேதனை 
எவ்வளவு என்று 
உனக்குத் தெரியுமா?

உன்னோடு நான் 
நடந்த பாதைகளில்
‘ உன் நினைவுகளோடு ‘
நான் நடந்து செல்வது 
உனக்குத் தெரியுமா …..???

Categories: கவிதை

நான் நீ நாம்

அக்டோபர் 13, 2009 prad2deep 1 comment

நான் நெருங்கிய போது நீ விலகி நின்றாய்

நீ நெருங்கிய போது நான் விலகி நின்றேன்…

நான் பேசிய போது நீ அமைதிகாத்தாய்

நீ  பேசிய போது நான் மௌனமாய் இருந்தேன்…

எப்போதும் நாம் காதலை சொல்லவில்லை

எப்போதும் நாம் காதலை விடவுமில்லை…

Categories: கவிதை

நானும், என் பேனாவும்…

அக்டோபர் 5, 2009 prad2deep 7 பின்னூட்டங்கள்

நாளை நாளை என்று நாட்களை நகர்த்தி, ஒரு வழியாய் வந்து சேர்ந்துள்ளேன் வலைப்பதிவர்களின் விலாசத்திற்கு…

 இது என் முதல் “இடுகை” (நன்றி கூறுகிறேன் இந்த இனிய சொல்லை எனக்கு அறிமுகம் செய்த என் தோழிக்கு !!!). என்றாலும் என் பேனாவிற்கு இது முதல் பக்கமல்ல. அளவில்லா காகிதங்களை அநியாயமாய் கொலை செய்த சாதனை எனக்குண்டு…கவிதைகள் என்ற பெயரில், கற்பனை என்ற பெயரில்…அதன் தொடர்ச்சியாய் இதோ…இங்கும் ! என்ன ஒரு ஆனந்தம் என்றால், காகிதங்களுக்கு காயங்கள் வரப்போவதில்லை…

 சரி எதைப் பற்றி எழுதலாம் என்று சிந்தித்து பார்த்த போது, ஒன்றும் தெளிவாக அகப்படவில்லை. நேற்று பார்த்த சினிமா, இல்லை அம்மாவின் சமையல்…அதுவும் வேண்டாம் – சந்நியாசம் பற்றி…அட எதைத் தான் எழுத ? சிலை செய்ய உளி மட்டும் போதுமா என்ன ? என்னை நானே கேட்டுக் கொள்கிறேன்…

 ஒரு வழியாய் இரண்டு தலைப்புகள் கொண்டு எழுத தீர்மானித்துள்ளேன்…இரண்டும் ஒன்றோடு ஒன்று பொருந்துமென்று தோன்றுவதால்…ஒரு வீடு இரு வாசல் போல்…

 கமல் ஹாசனின் ‘உன்னைப் போல் ஒருவன்’ -  ஆன்ம சாந்தி :

 எத்தனை பெரிய முயற்சி இந்த திரைப்படம் என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா ? நம்புங்கள் ! இந்த சமூகத்தின் மன அழுத்தத்தை தீர்க்கமாய்ச் சொல்லிய ஒரு தைரிய முயற்சி…சாமான்யனின் உணர்வுகளை உறுதி செய்த , ஒரு உன்னத முயற்சி…இப்படி கூறிக்கொண்டே போகலாம். நான் ஏதோ திரை விமர்சனம் செய்கிறேன் என்று நினைக்க வேண்டம். இல்லை, இது விமர்சனத்திற்கு அப்பாற்பட்டு நிற்கின்ற உணர்வின் வெளிப்பாடு !

Actor_kamala_Hassan_Unnai_Poi_Oruvan ஒரு மனிதன், தனி மனிதன், சாமான்யன் (a Common Man) என்று சொல்லப்படும் அந்த ஜீவன், தன் சக்திக்கு மீறியதாய் சட்டமும் அதிகாரமும் நிர்ணயக்கும் செயல்களை செய்கிறான். இவனால் பெரிதாக என்ன செய்ய இயலும் என்று சட்டமும் அதிகாரமும் நினைத்திருந்த கூற்றை உடைத்து எறிகிறான்…அந்த செயல் “தீவிரவாதம்”. எதற்காக இதைச் செய்கிறான் ? எவ்வாறு இதைச் செய்கிறான் ? எவ்வாறு இது சாத்தியமாகும் ? என்ற கேள்விகளின் பதில் தான் இந்த முயற்சி. “முள்ளை முள்ளால் எடு” என்பது தான் சொல்லப் பட்டிருக்கின்றது என்று நாம் பொதுவாகக் கருதி விடுவதில் எனக்கு உடன்பாடு இல்லை. நம் ரோஜாக்களைப் பாதுகாக்க முள் வேடம் தேவையெனில் அது தவறில்லை என்று கொள்ளலாம் என்பது என் கருத்து. “நாலு பேருக்கு நல்லது செய்யனும்னா எதுவும் தப்பில்லை ” – இது நாயகன் டயலாக், யாரும் மறந்திருக்க வாய்ப்பில்லை.

 ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காட்டு ‘ என்றார் காந்தி. மனம் மாறி விடுவார் என்று நம்பி தான் பாவம் சொல்லி விட்டு சென்றார். நல்லவேளை, “மாறி மாறி அறைந்தாலும் மந்தமாகவே நில்லு” என்று சொல்லவில்லை. பின் ஏன் இந்த பொறுமை. தீமைகள் சகஜமாய் நிகழ்வது போல் தீர்வுகள் நிகழ்வதில்லை. இருநூறு மனிதர்கள் கொண்ட ஒரு கூட்டம், இருநூறு கோடி மனிதர்களுக்கு அச்சுறுத்தல். இதற்கு தீர்வு என்ன ? கால காலமாய் நாம் சொல்கின்ற ஒரு நாமரத்த வாக்கியம் ” திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது !” இங்கு திருடனுக்கு பதில் தீவிரவாதி என்று போட்டுக்கொள்ளுங்கள். யாரும் திருந்தப்போவதில்லை, தண்டிக்காத வரையில். ஒன்று சட்டமும் அதிகாரமும்  வெளிச்சத்திற்கு வர வேண்டும், இல்லை முற்றிலும் இருட்டறைக்கு செல்லட்டும். இப்படி கண்ணை கட்டி அரை இருட்டில் ஆனது ஆகட்டும் போனது போகட்டும் என்ற நிலையே தொடர்ந்து கொள்ள விரும்பினால் இருநூறு பேர் என்ன, இருபது பேர் கூட அச்சுறுத்தல் தான் !!!

 இந்த கோபம் உங்களுக்கும் உண்டு, எனக்கும் உண்டு, தெருக்கோடியில் கடை வைத்திருக்கும் கணபதி அண்ணனுக்கும் உண்டு. யாருக்குத் தான் இல்லை இந்த கோபம்?. நாமெல்லாம் சாமான்யர்கள். இந்தக் கோபம் இருந்தால் மட்டும் என்ன செய்து விட முடியும்? நாம் காவல்துறையில் இல்லை. கருப்பு அங்கி அணிந்து நீதிமன்றம் செல்வதில்லை. சரி இது கூட வேண்டாம். கரைவேட்டி அணிந்து சட்டமன்றமாவது செல்கின்றோமா? அதுவுமில்லை. நாமெல்லாம் சாமான்யர்கள். நம்மால் என்ன செய்ய முடியும். இதைத்தானே அரசியல் சிறுத்தைகளும், காவல் சிங்கங்களும் நினைக்கின்றன. இது தானே நம் கோபம். இதற்கு பதில் தான் “உன்னைப் போல் ஒருவன்…”

 ——-

Nature_1ஒரு வழியாய் ஒரு தலைப்பை ஓரளவு முடித்து விட்டதாக நினைக்கின்றேன். இன்னொன்று ‘ஆன்ம சாந்தி”…அது என்ன ஆன்ம சாந்தி. சத்தியமாகச் சொல்கின்றேன், இது மிகப் பெரிய வார்த்தை. நாம் யோசிக்கும் சிறுபிள்ளைத் தனமான விஷயமன்று. என்றாலும் மனதில் பட்டதை சொல்கின்றேன். எத்தனையோ சந்தர்ப்பங்களில் ஆன்ம சாந்தி பற்றி பெரியோர் பேசியது கேட்டிருப்போம். ஆன்மா என்பதன் விளக்கம் குறித்து படித்திருப்போம். த்வைதம், அத்வைதம் பற்றி கேட்டிருப்போம். நம்மில் எத்தனை பேர் அதை முழுமையாக புரிந்திருக்கின்றோம். சத்தியமாக நான் அரைக்கிணறு வரைதான். அதனால் தானோ என்னவோ எத்தனையோ கேள்விகள். இந்தப் பதிவின் மூலம் எனக்கு விளக்கம் கிடைக்க பிரார்த்திக்கிறேன்.

 நகமும் சதையும், இன்ன பிற விளங்கிட முடிந்த இந்த பூதவுடலுக்கு ஆயுள் என்பது நிர்ணயிக்கப் பட்டது. விளக்கப்படாத, விளங்கிடமுடியாத “ஆன்மாவிற்கு” ஆயுள் என்ற சொல்லே பொருந்தாது. ஏன் ? அது அழிவில்லாதது. அழிவில்லா ஆன்மாவிற்கு சாந்தி என்பது எவ்வாறு நிகழும் ? இப்படி கேட்டுக் கொண்டே போகத் தோன்றுகிறது. சரி, நாம் விஷயத்திற்கு வருவோம்.

 நாம் வாழ்கையில் எண்ணற்ற சம்பவங்கள், எதிர்பாராத நிகழ்வுகள். நாம் விரும்பியது சில. இருப்பினும் வாழ்க்கை நடந்து கொண்டு தானே இருக்கின்றது. உதாரணங்கள் எத்தனையோ. சிறுவயது வாழ்க்கை நாம் விரும்பியது போல் அமைவதில்லை. சூழ்நிலைகளுக்கும் சந்தர்ப்பங்களுக்கும் எப்போதும் நாம் அடிமைகளே. விரும்பிய பெண்ணுடன் என் வாழ்க்கை இல்லை என்பதால், இன்ன பிற கடமைகளைத் துறந்து மாண்டு விடப் போவதில்லை. வாழ்க்கை அது செல்லும் வகையில் சென்று கொண்டே இருக்கும். என்ன ஒன்று, நாம் நினைக்காத வகையில், அமைதியாகவோ இல்லை சீற்றத்தோடோ !!! நாமெல்லாம் சாமான்யர்கள் தானே. இறக்கும் வரையில் எத்தனையோ ஆசைகள், கோபங்கள், தாபங்கள். ‘உன்னைப் போல் ஒருவனாய்’, ‘என்னைப் போல் ஒருவனாய்’ எத்தனை எத்தனை நிறைவேறா ஆசைகள், கோபங்கள் கொண்டோர் உண்டு ? நிறைவேற ஆசைகள் கொண்ட ஆன்ம சாந்தி கொள்ளாது என்கின்றோமே, பின் இத்தனையும் இருக்கையில் கூடு விட்டு பிரிந்த எந்த ஆன்மாவிற்குத் தான் சாந்தி என்பது உண்டு ? இரண்டு நாள் செய்யும் ஈமக் கிரியைகளால் அனைத்தும் கூடி விடுமா?

 புரியவில்லை… !

- Visu…

Categories: Uncategorized

காதலும் கவிதையும்

மார்ச் 4, 2009 prad2deep மறுமொழியவும்

கவிதை எழுத நான் கவிஞன் அல்ல
உன் அழகை பாட நான் புலவனும் அல்ல;
காதலை வார்த்தைக்குள் அடைக்கும் போது
அந்த சிறை வைப்பின் வெளிபாடு தான் கவிதை.

Categories: Uncategorized

வானவில்

ஆகஸ்ட் 9, 2008 prad2deep மறுமொழியவும்

வானவில்லை
பார்க்கும்போதெல்லாம்
சாரலாய் வந்து
பார்வையால் ஒளியூட்டி
என் வாழ்கையை
வண்ணமயமாக்கிய
உன்னையே நினைக்கிறேன்;
சாரல் உள்ளவரை
மட்டும் தான்
இருக்கும் வானவில்
நிலைபபதில்லையே
நீயும்…

Categories: Uncategorized குறிச்சொற்கள்:

என்னுள் நீ

ஆகஸ்ட் 9, 2008 prad2deep மறுமொழியவும்

அதிகாலையில்
குயில் கூவும் பொது
என்னுள் மய்யல்கொள்ளும்
நீ எழுந்து கொள்கிறாய்….

Categories: Uncategorized குறிச்சொற்கள்:

ஹைகூ பூக்கள்

ஆகஸ்ட் 4, 2008 prad2deep மறுமொழியவும்

* அஞ்சிநேயர் கோவில்
  வணங்கிவிட்டு திரும்பயிலே
  எதிரில் பெண்

* அழகான குண்டுக் குழந்தை
   பார்த்து சிரிக்கையிலே
   போடா என்றது

Categories: Uncategorized

கனாகோலங்கள்

ஆகஸ்ட் 3, 2008 prad2deep மறுமொழியவும்

கனவு காண்பது
சுகம் தான்…
அதன் நிகழ்வுகள்
கனவுலகிலேயே நிலைபதானால்
அந்த கனவுகளும்
சுமைதான்…
கண்ணே
உன் நினைவுகளும்
சுமைதான்!

Categories: Uncategorized குறிச்சொற்கள்: